சனி, 7 செப்டம்பர், 2013

தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-2)

உலக மொழிகளிலேயே அதிகமான சொற்கள் கொண்டது நம் மொழி. பழங்காலத்தில் தமிழன் அப்போதிருந்த சுழலில் நல்ல தரமான, சரியான சொற்களை உருவாக்கியுள்ளார்கள். ஒவ்வொரு சூழலுக்கும், பண்புக்கும், இடத்திற்கும், பயன்படும் முறைக்கும் ஏற்றவாறு ஒரே மூலப்பொருள் சுட்டும் பல சொற்களைப் சொல்லாக்கம் செய்துள்ளனர். எடுத்துகாட்டாக யானை என்ற விலங்கை சுமார் 170 பெயர்களில் அழைத்தனர். யானையின் குணம், வடிவம், செய்கை, தோற்றம், பயன்பாடு, இடம், இனம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சொல்லாக்கம் செய்துள்ளனர். இதுபோல் பல சொற்களைச் சொல்லலாம். தமிழ் மொழியில் ஒரு பொருளுக்கு ஒரு சொல் தான் என்றில்லாமல், பல்வேறு சொற்களை கொண்டுள்ளது அக்காலத்திய சொல்லாக்க திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

தற்காலத்தில் அன்றாடம் புதுபுது சொற்கள் மற்ற மொழிகளில் வந்துகொண்டிருக்க அவைகளுக்குச் சரியான ஒரு தமிழ் சொற்களை கூட உருவாக்கமுடியாமல் திணறி வருகிறோம். 20 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கியிருக்க வேண்டிய சொற்களுக்கு கூட இன்றும் சொற்களை உருவாக்கி அதை வழக்கில் கொண்டுவர முடியாமல் தவிக்கிறோம். ஆங்கிலத்தில் ஒரு புதிய சொல் ஓரிரு வாரங்களில் வழக்கத்தில் வந்துவிடுகிறது, ஆனால் தமிழ்ச்சொற்கள் வழக்கத்திற்கு வர பல ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்சாரம் என்ற செல்லே நடைமுறைக்கு வர 24 ஆண்டுக் காலம் ஆனதாக சொல்லப்படுகிறது. 

உண்மையில் நாம் செய்யும் தவறு தான் என்ன? என்று நாம் சிந்ததுண்டா?. எப்போது ஆங்கிலேயர் நம் மண்ணில் காலடி எடுத்து வைத்தார்களோ அப்போதே தமிழினம் மட்டுமில்லை தமிழ் மொழியும் அடிமைப்பட்டு விட்டது. நமக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதாக சொல்கிறோம், ஆனால் தமிழ் இன்னமும் அயல் மொழிக்கு அடிமைப்பட்டு தான் கிடக்கிறது.

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...