வெள்ளி, 31 ஜனவரி, 2014

தமிழகத்தில் நடக்கும் தமிழ் படுகொலைகள்



Scooter – துள்ளுந்து
Motor bike - உந்துருளி – உந்துவளை
AutoRickshaw –மூவுருளி உந்து 
Van – கூடுந்து சிற்றுந்து 
Pickup Truck – பொதியுந்து
Jeep - கடுவுந்து - வல்லுந்து
SUV(Sports Utility vehicle) பெருங்கடுவுந்து
Lorry / Truck – சுமையுந்து – சரக்குந்து
Ambulance - திரிஊர்தி
Motor vehicle – தானுந்து
Train – தொடருந்து தொடர்வண்டி புகைரதம்.
Fighter Jet – போர் விமானம், போர் வானுருத்தி.

Helicopter – உலங்கு வானூர்தி
Boat – படகு. தோனி
Bus – பேருந்து
Ship – கப்பல், நாவாய்.


மேலே உள்ள சொற்கள் சில வாரங்களுக்கு முன்பு இணையதளம் ஒன்றில் வாகனங்களுக்கான தூய தமிழ் சொற்கள் என பிரசுரிக்கப்பட்டவை. இவற்றில் குறுக்கே அடிக்கப்பட்ட சொற்களை பாருங்கள், தமிழுக்கு நல்லது செய்கின்றோம், தமிழை வளர்கிறோம் என்று அவர்களாகவே சொல்லிக்கொண்டு தமிழைப் படுகொலை செய்துள்ளனர். இவர்களைப் போன்றே இணையத்தில் ஆங்காங்கே தனக்குத் தெரிந்த இரண்டு மூன்று சொற்களை இணைத்து, இந்த ஆங்கிலச்சொற்களுக்கு இணையான புதிய தமிழ்ச்சொல் இது என நிறைய பேர் 
எழுதி வருகின்றனர். இவர்கள் முதலில் இதுபோன்ற சொல்லாக்கங்களை நிறுத்தினாலே தமிழ் பிழைத்துவிடும். புதிய சொற்களை உருவாக்குங்கள் வரவேற்கிறோம், அதற்கு முன் சொல் என்றால் என்ன? சொற்றொடர் என்றால் என்ன என்பதைத் தெரிந்துக்கொண்டு (What is word? & What is a sentence?) செய்யுங்கள். 

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கராத்தே என்ற கலையும் நம்முடையது தான் - கராத்தே என்ற சொல்லும் நம்முடையது தான்



உலகின் தற்காப்பு கலைகளின்(Martial arts) வேர் எங்கிருந்து ஆரம்பித்தது? என்ற ஆராய்ச்சிகளின் முடிவுகள் போதிதர்மர் என்ற பெயரில் போய் முடிகிறது. ஆம், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த புத்தமதத்தைச் சார்ந்த பல்லவ மன்னன் போதிதர்மன் தான் முதல்முறையாக எதிரிகளிடம் இருந்து ஆயுதமில்லா நிலையில் தனி மனிதன் ஒருவன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளச் சண்டையிடும் புதிய முறையை உருவாக்க முயன்றார். அப்போது தமிழரின் பாரம்பரிய தற்காப்பு கலையான வர்மகலையை அடிபடையாகக் கொண்டும், விலங்குகள் மற்றும் பறவகைகள் சண்டையிடும் அசைவுகளை மனிதனின் அசைவுகளுடன் இணைத்தும் புதிய முழுமையடையா தற்காப்பு மற்றும் சண்டையிடும் முறையை உருவாக்கினார். இதுவே உலகின் அனைத்துத் தற்காப்பு கலைகளின் முதல் வேற்றமாக (Version) கருதப்படுகிறது.

ஞாயிறு, 12 ஜனவரி, 2014

காங்கிரஸ் கொடியும் அதன் பெயரும்















ஒவ்வொரு இந்தியருக்கும் தெரிந்த செய்தி தான், நாட்டின் தேசிய கொடிக்கும் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கும் பெரிய அளவில் வித்தியாசம் கிடையாது, இரண்டு கொடிகளின் நடுவில் இருக்கும் அசோகா சக்கரமும், கையும் மட்டும் தான் வித்தியாசப்படும். இரண்டு கொடிகளை இப்படித் தான் வித்தியாசபடுத்திப் பார்க்கவேண்டும் எனும்போது நமக்குத் தெரிந்த விசயம் அயல் நாட்டுக்காரர்களுக்குத் தெரியுமா என்பது சந்தேகம் தான். அவர்களைப் பொறுத்தவரை மேலே காவி நிறமும், நடுவில் வெள்ளை நிறமும், கிழே பச்சை நிறமும், நடுவில் ஏதேனும் சின்னம் கொண்ட கொடியை நமது நாட்டின் தேசியகொடி என்று தவறாக நினைத்துகொள்கின்றனர்.படிக்காத மற்றும் கிராமப்புற மக்களின் மனதில் காங்கிரஸ் கட்சி மட்டும் தான் இந்திய கட்சி என்றும் மற்றக் கட்சிகள் எதோ பக்கத்து நாட்டுப் பகையாளி கட்சிகள் போன்றதொரு தவறாக மனதில் உருவகப்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் கொடியையும் தேசிய கொடியையும் பார்க்கும் மாணவர்கள் மனதில் கட்சி கொடி மீது மறைமுகமாக ஒரு மரியாதையை உண்டுபண்ணுகிறது. 'சுதந்திரத்திற்குப் பாடுபட்டது காங்கிரஸ் இயக்கம்' என்று படிக்கும் மாணவர்கள் 'சுதந்திரத்திற்குப் பாடுபட்டது காங்கிரஸ் கட்சி' எனத் தவறுதலாகப் புரிந்து கொண்டு மேலும் காங்கிரஸ் என்ற சொல்லின் மீதான மரியாதை மேலும் அதிகமாகிறது. சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற அரசு விழாக்களில் காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கொடிக்கும் மரியாதை செய்யப்படுவது போன்றே எண்ணங்கள் ஓடுகிறது. இந்தக் கட்சிகளின் மீது மக்களுக்கு ஏற்படும் வெறுப்பு விருப்புகள் நாட்டின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றைத் தவறுதலாகப் பாதிப்படைய செய்கிறது. இப்படிப் பல குழப்பங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். இதுபோன்றதொரு குழப்பங்கள் விளைவிக்கக் கூடிய காங்கிரஸ் கொடியை யார் அடவு(Design)செய்தது்?, இதுபோன்று கட்சி கொடியையும், பெயரையும் அரசியல் கட்சிகள் பயன்படுத்தலாமா?,இதுபோன்றதொரு கொடியையும் பெயரையும் கட்சிகள் கொண்டிருப்பதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கிறதா?

இமயம் எனும் பெயர் தமிழ் தான் தெரியுமா?

இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆகும். உலகிலேயே ஒப்பற்ற மிகப...